தமிழகம்

மதுரை மாநகராட்சி ஊழலில் அதிமுக பெயரை சேர்க்க சதி : முன்னாள் அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மதுரை சரக டிஐஜி அபிநவ் குமாரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில் “உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுப்படி மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

முறைகேடு தொடர்பாக வரி விதிப்பு குழு முன்னாள் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார், காவல்துறை விசாரணையில் கைது செய்யப்பட்ட கண்ணன் வரிவிதிப்பு முறைகேட்டில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் அதிமுக மாமன்ற உறுப்பினர்களுக்கும் தொடர்பு உள்ளது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், வரி முறைகேடு தொடர்பாக ஊடகத்திற்கு பேட்டி அளித்த மேயர் இந்திராணி பெரிய அளவில் ஊழல் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளார், ஆகவே, மாநகராட்சி வரி முறைகேடு வழக்கு வேறு திசைக்கு சென்று கொண்டிருப்பதால் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மனு அளித்துள்ளனர்.

மாநகராட்சி வரி ஊழல் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும், அதிமுக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சிகளின் வரி உயர்த்தப்படவில்லை, அதனால் எந்த ஒரு முறைகேடுகளும் நடைபெறவில்லை.

திமுக ஆட்சி காலத்தில் 150 சதவீதமாக வரிகள் உயர்த்தப்பட்டதால் அவ்வரிகளை குறைப்பதற்காக மக்கள் இவ்வாறான வழிகளை தேடுகிறார்கள், நீதிமன்றம் அமைத்த குழு மாநகராட்சி வரி ஊழலை முழுமையாக விசாரிக்கும் என நம்புகிறோம் என கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.