வண்டி எண் 12634 கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் கன்னியாகுமரியில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது பிக்சாண்டார் கோவில் – வாளாடி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்த போது யாரோ மர்ம நபர்கள் சிலர் ரயில் தண்டவாளங்களுக்கு இடையே டயர்களை நின்ற நிலையிலும் படுக்கை வசத்திலும் போட்டுள்ளனர்.
இதைக் கண்ட ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு உடனடியாக ரயிலின் வேகத்தை குறைத்தார்.
ஆயினும் படுக்கை வசத்தில் நிறுத்தப்பட்டிருந்த டயர் ரயில் இன்ஜின் தட்டி தண்டவாளங்களுக்கு வெளியே வீசப்பட்டது. படுக்கை வசத்தில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு டயர் ரயில் என்ஜினில் மாட்டியதால்,
என்ஜின் மின் ஒயர் கேபிள்கள் துண்டானதால் நான்கு கோச்சுகளில் ஃபேன், லைட்கள் இயங்கவில்லை.
இதுகுறித்து பைலட் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாச்சலம் இருப்புப் பாதை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மணிவண்ணன் விசாரணை மேற்கொண்டு வந்தார்.
மர்ம நபர்கள் சிலரின் செயலால் பெரும் ஆபத்து எழக்கூடிய சூழலில் டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அந்தப் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக போராடி வரும் சூழலில் இந்த அசம்பாவித சம்பவம் நடைபெற்றுள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில் திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் விசாரணை நடத்தினார்.
மேலும் இந்த சதி செயல் குறித்து விசாரிக்க டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் 2 தனிப்படைகளும், ரயில்வே போலீசார் சார்பில் 2 தனிப்படைகளும், ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் 1 படைகளும் என மொத்தம் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சுரங்கப் பாதைக்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் இது போன்ற
செயலில் ஈடுபட்டார்களா? அல்லது தீவிரவாத அமைப்பினர் யாராவது ரயிலை கவிழ்க்க முயற்சி செய்தார்களா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
நேற்று அந்தப் பகுதியை சேர்ந்த மூன்று சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் யாருக்கும் இதில் தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளது அதனால் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.