Categories: தமிழகம்

ரயிலை கவிழ்க்க சதி? அடுத்தடுத்து அரங்கேறிய பயங்கரம்… சிக்கிய சிறுவர்கள்? பரபரப்பு சம்பவம்!!

வண்டி எண் 12634 கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் கன்னியாகுமரியில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது பிக்சாண்டார் கோவில் – வாளாடி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்த போது யாரோ மர்ம நபர்கள் சிலர் ரயில் தண்டவாளங்களுக்கு இடையே டயர்களை நின்ற நிலையிலும் படுக்கை வசத்திலும் போட்டுள்ளனர்.

இதைக் கண்ட ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு உடனடியாக ரயிலின் வேகத்தை குறைத்தார்.

ஆயினும் படுக்கை வசத்தில் நிறுத்தப்பட்டிருந்த டயர் ரயில் இன்ஜின் தட்டி தண்டவாளங்களுக்கு வெளியே வீசப்பட்டது. படுக்கை வசத்தில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு டயர் ரயில் என்ஜினில் மாட்டியதால்,
என்ஜின் மின் ஒயர் கேபிள்கள் துண்டானதால் நான்கு கோச்சுகளில் ஃபேன், லைட்கள் இயங்கவில்லை.

இதுகுறித்து பைலட் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாச்சலம் இருப்புப் பாதை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மணிவண்ணன் விசாரணை மேற்கொண்டு வந்தார்.

மர்ம நபர்கள் சிலரின் செயலால் பெரும் ஆபத்து எழக்கூடிய சூழலில் டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

அந்தப் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக போராடி வரும் சூழலில் இந்த அசம்பாவித சம்பவம் நடைபெற்றுள்ளது.

சம்பவம் நடந்த இடத்தில் திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் விசாரணை நடத்தினார்.

மேலும் இந்த சதி செயல் குறித்து விசாரிக்க டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் 2 தனிப்படைகளும், ரயில்வே போலீசார் சார்பில் 2 தனிப்படைகளும், ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் 1 படைகளும் என மொத்தம் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுரங்கப் பாதைக்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் இது போன்ற
செயலில் ஈடுபட்டார்களா? அல்லது தீவிரவாத அமைப்பினர் யாராவது ரயிலை கவிழ்க்க முயற்சி செய்தார்களா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

நேற்று அந்தப் பகுதியை சேர்ந்த மூன்று சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் யாருக்கும் இதில் தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளது அதனால் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்

கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…

4 hours ago

திமுக அரசுக்கு எதிராக பேசுவதால் என் மீது வழக்கு தொடுக்க சதி நடக்கிறது : எம்எல்ஏ பரபரப்பு புகார்!

வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…

4 hours ago

வெறித்தனமான அப்டேட்! விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி?

விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…

5 hours ago

ஏதாவது ஒரு ஆக்ஷன் எடுப்பாங்க… மா விவசாயி போராட்டம் குறித்து அமைச்சரின் அலட்சிய பதில்!

வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…

5 hours ago

கூலி படத்தின் பிசினஸை அசால்டாக தட்டிவிட்டு ஓவர்டேக் செய்த ஜனநாயகன்? செம டிவிஸ்ட்டா இருக்கே!

கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…

5 hours ago

அதிமுகவை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் : விஜயபாஸ்கர் ஆவேசம்!

திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…

6 hours ago

This website uses cookies.