Categories: தமிழகம்

பல பெண்களுடன் தொடர்பு… கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்திய கணவன் : இரண்டு மகள்களுடன் நீதி கேட்டு போராடிய பெண்!!

திருப்பூர் : தனது கணவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்து வரும் நிலையில், அவரிடம் உரிய இழப்பீடு பெற்றுத் தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் இளம் பெண் குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் ஆத்துபாளையத்தை சேர்ந்தவர் பத்மாவதி (வயது 36). இவர் நேற்று தனது மகள்களுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார் பத்மாவதியிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதுகுறித்து பத்மாவதி போலீசாரிடம் கூறியதாவது:- எனது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம். எனது கணவர் பரந்தாமன். நாங்கள் இருவரும் திருப்பூர் ஆத்துப் பாளையத்தில் வசித்து வந்தோம். எங்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

இருவரும் பனியன் நிறுவனங்களில் வேலை செய்து குடும்பத்துடன் இருந்து வந்தோம். இந்நிலையில் எனது கணவர் பரந்தாமனுக்கு பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது.

இதுகுறித்து நான் கேட்கும் போது எனக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் என்னை அவர் அடித்து கொடுமைப் படுத்தி துன்புறுத்தி வந்தார். இந்நிலையில் இருவரும் நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் அப்போது அதிகாரிகள் இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் என்னுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் அதற்கு சற்று கால அவகாசம் வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். எனவே என்னை ஏமாற்றிய கணவர் மற்றும் அவரது கள்ளக்காதலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனது மகள்களின் வாழ்க்கை கருத்தில் கொண்டு பரந்தாமனிடம் இருந்து எனக்கு உரிய இழப்பீடு தொகை பெற்று தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

1 day ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

1 day ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

2 days ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

2 days ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

2 days ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

2 days ago

This website uses cookies.