திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி ஒன்று கிருஷ்ணா கால்வாயில் விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.
சென்னை துறைமுகம் பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம் பெல்லாரி நோக்கி மென்பொருட்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. ஊத்துக்கோட்டை அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியில் லாரி சென்று கொண்டிருந்த போது, திடீரென கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் தலைக்குப்பறாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் (23) அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். அவரிடம் நடத்திய விசாரணையில், எதிரே வந்த மினி வேன் செல்ல வழி விட்டபோது, எதிர்பாராத விதமாக கிருஷ்ணா கால்வாயில் லாரி தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.
இதனிடையே, அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் லாரிகளை பார்த்து செல்ல வாகனத்தை சாலையில் நிறுத்தவதால், அப்பகுதியில் மேலும் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, காவல்துறை உடனடியாக கால்வாயில் இருந்து லாரியை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.