பாலியல் வழக்கில் தொடர்நது தலைமறைவு.. முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்க்கு லுக் அவுட் நோட்டீஸ்!
கடந்த 2021ம் ஆண்டு பெண் எஸ்.பி., ஒருவருக்கு காரில் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, அப்பெண் எஸ்.பி., புகார் தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அளித்த தீர்ப்பில், ‛‛ராஜேஷ் தாஸ் குற்றவாளி. அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து” உத்தரவிட்டார்.
அவரை சரணடைய உத்தரவிடப்பட்டது. ஆனால், சரணடைய அவகாசம் கோரி ராஜேஷ் தாஸ் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ராஜேஷ் தாஸ் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை கைது செய்ய போலீசார், அவரது வீட்டிற்கு சென்ற போது அவர் தலைமறைவானது தெரியவந்ததாக தெரிகிறது.
தலைமறைவானதை தொடர்ந்து வெளிநாடுகளுக்கு அவர் தப்பி செல்லாத வகையில் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் ராஜேஷ் தாஸுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
This website uses cookies.