கோவையில் நீடிக்கும் வன்முறை.. சட்டசபையில் இத பேசவே விட மாட்டீங்கறாங்க : பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!
சட்டசபையில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், கோவையில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு திட்டமிட்ட சதி செயல்.
இதில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்று தேசிய புலனாய்வு முகமை தங்களின் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு என்ஐஏவிற்கு மாற்றப்பட்டு தீவிரவாத தொடர்புகள் எல்லாம் அம்பலப்படுத்தப்பட்டு வருகிறது.
கோவையில் வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கோவை இன்னும் கூட மத அடிப்படைவாதிகள் தீவிரவாதிகள் செயல்பாட்டிலே இருக்கின்ற காரணத்தினால் இம்மாதிரியான செயல்பாடுகள் கோவை மக்களின் அமைதியை பாதுகாப்பை பாதிக்கும் என நம்புகிறோம்.
இந்த விசயத்தில் அரசு மிகுந்த கவனத்தோடு எச்சரிக்கை உணர்வோடு இருக்கவேண்டும். எப்படி நீங்கள் ஒருபுறம் இஸ்லாமிய வாக்கு வங்கிக்காக நீங்கள் அரசியல் செய்கிறீர்களோ நாங்கள் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்காக நாங்கள் அவர்களின் குரலை பதிவு செய்ய விரும்பி கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தோம்.
வழக்கம் போல பேரவைத்தலைவர் அவர்கள் எங்களை பேச அனுமதிக்கவில்லை. அமைச்சர்களுக்கு பதிலாக சபாநாயகர் அப்பாவு பதில் அளிப்பதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.