திருச்சி : டெண்டர் பில்லுக்கு 6 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் பாலம், கட்டிடம், சாலை போடும் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
ஒப்பந்ததாரர்களில் ஒருவரான முஹம்மது இஸ்மாயில் என்பவர் புத்தாநத்தம் ஊராட்சியில் நடைபெற்று முடிந்த பணிகளுக்கான ஒப்பந்த தொகையை பெறுவதற்கு ஊராட்சி செயலர் வெங்கட்ராமனை அணுகினார்.
அப்போது 4 லட்சம் ரூபாய் செக் கொடுக்க வேண்டும் என்றால் 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வெங்கட்ராமனை கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத இஸ்மாயில் இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மணிகண்டனிடம் புகார் அளித்துள்ளார். அவரின் அறிவுறுத்தலின் பேரில் 6ஆயிரம் ரூபாய் லஞ்சப்பணத்தை இஸ்மாயில், வெங்கட்ராமனுக்கு கொடுத்துள்ளார்.
வெங்கட்ராமன் லஞ்ச பணத்தை வாங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து வெங்கட்ராமன் அலுவலகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
மேலும் அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் பணம் மற்றும் ஆவணங்கள் ஏராளமாக கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.