Categories: தமிழகம்

`இந்த டிரெஸ் போட்டுட்டு வரக்கூடாது’ : புதுச்சேரி போலீசார் பேச்சால் புது சர்ச்சை…!

புதுச்சேரி : புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த வெளி மாநில பெண்களிடம் அவர்கள் அணிந்துவந்த ஆடை குறித்து போலீசார் பேசும் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி கடற்கரை சாலை எதிரே உள்ளது பிராஃன்சுவா மார்ட்டின் விதி இங்கு அரபிந்தோ ஆசிரமத்திற்கு சொந்தமாக பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்நிலையில் இங்கு ஹைதராபாத்யில் இருந்து சுற்றுலா வந்த மென்பொருள் நிறுவனத்தில் பணி புரியும் இரண்டு பெண்கள் பள்ளி வளாகத்தின் மதில் சுவர் அருகே நின்று புகைப்பட்டம் எடுத்துள்ளனர். இதனை பார்த்த பள்ளியின் ஊழியர் மாணவர்கள் வரும் நேரம் என்பதால் அவர்களை அங்கு இருந்து செல்லுமாறு கூறியதாக தெரிகிறது.

ஆனால் அவர்களோ அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து புகைப்படம் எடுத்து வந்ததுள்ளனர். அப்போது அவ்வழியே ரோந்து வந்த பெரியகடை காவலர்கள் திருமுருகேசன் மற்றும் ராவியிடம் பள்ளி ஊழியர் சென்று ஆபாச ஆடை அணிந்து வந்த பெண்களை அங்கிருந்து அனுப்ப கோரி கூறியுள்ளார். இதனை அடுத்து போலீசார் இருவரும் அந்த பெண்களை இது தனியாருக்கு சொந்தமான பள்ளி இடம் மேலும் இது பள்ளி விடும் நேரம் என்பதால் அங்கிருந்து கிளம்பும் மாறு கூறியுள்ளனர்.

ஆனால் ஆபாச ஆடை அணிந்து வந்த அப்பெண்களோ காவலர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் புதுச்சேரி காவலர்கள் தங்கள் ஆடை குறித்து அறிவுறுத்தியதாக பதிவிட்டதை அடுத்து இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.மேலும் அவர்கள் வெளியீட்டுள்ள வீடியோவில் காவலர்கள் ஆடை குறித்து ஏதும் பேசியது பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

KavinKumar

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.