திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலர் சிகிச்சைக்காக வந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று சிலருக்கு கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவித்துள்ளது. தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத் துறை தீவிரப்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மீண்டும் கொரோனா படுக்கை வசதிகளை ஏற்படுத்த அறிவித்துள்ளது.
அதன்படி திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கொரோனா உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் செயல்படும் வகையில் இந்த மையம் செயல்படும். கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் அறிகுறி உடையவர்கள் இந்த மையத்துக்கு வந்து தேவையான உதவிகள் மற்றும் ஆலோசனைகள் பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுபோல் 25-க்கும் மேற்பட்ட கொரோனா படுக்கை வசதிகளும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது யாருக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.