கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
நோய் தாக்கம் அதிகரித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் கொரேனா பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்க: மக்களை ஏமாற்ற ரோடு ஷோ நடத்துகிறார்.. முதலமைச்சருக்கு எதுவும் தெரியல : அன்புமணி குற்றச்சாட்டு!
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை, கொரோனா பரவி வந்தாலும், வீரியமற்ற கொரோனா என்பதால் யாரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. முகக்கவசம் அணிவது சிறந்தது என்றாலும் கட்டாயம் இல்லை என அறிவித்தது.
இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஞாயிறன்று தமிழகம் முழுவதும் பொது முடக்கம் – அமைச்சர் மா சுப்பிரமணி என இணையத்தில் போட்டோ வைரலாகி வருகிறது.
இந்த போட்டோ ஜூன் 22ஆம் தேதி மதுரையில் நடக்கும் முருகன் மாநாட்டுக்கு இடையூறு செய்யவே அதிகமாக பரவப்பட்டு வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் அளித்த விளக்கத்தில், இணையத்தில் வைரலாகி வரும் போட்டோ, 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட செய்தியை தற்போது வெளியானது போல தவறான தகவல் பரப்பி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
This website uses cookies.