கோவை தனியார் கல்லூரி மாணவி விடுதியில் சடலமாக மீட்டெடுக்கப்பட்ட விவகாரம் : பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்…!!

Author: Udayachandran RadhaKrishnan
26 April 2022, 3:32 pm
Psg Student Suicide- Updatenews360
Quick Share

கோவை : பி.எஸ்.ஜி மருத்துவக்கல்லூரி விடுதியறையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல் பிரேதபரிசோதனைக்குபின் விமானம் மூலம் சென்னை கொண்டு செல்லபட்டது.

சென்னை நங்கநல்லூரைச்சேர்ந்த வெங்கடவரதன் என்பவரது மகள் நந்தினி (வயது 22). கோவை பீளமேடு பி.எஸ்.ஜி மருத்துவகல்லூரியில் எம்பிபிஎஸ் நான்காம் ஆண்டு படித்துவரும் நந்தினி, கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் தனது பெற்றோருடுடன் தொலைபேசியில் பேசிய மாணவி, அதன் பிறகு கல்லூரிக்கு செல்லாமல் விடுதியிலேயே இருந்துள்ளார்.

நன்றாக படிக்கும் நந்தினி நேற்றைய செய்முறை தேர்வை புறக்கணித்த நிலையில், இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பெற்றோர் மாணவியின் செல்போனுக்கு அழைத்த நிலையில் மாணவியின் செல்போன் அணைத்து வைக்கபட்டிருந்தது.

இதனையடுத்து விடுதியின் மேற்பார்வையாளர் விடுதியில் சென்று பார்க்கும்போது மாணவி, தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். நேற்று காலை 10.30 மணியளவில் தனது கையை பிளேடால் அறுத்து கொண்ட மாணவி, அதனைத்தொடர்ந்து விடுதியறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பீளமேடு போலீசாருக்கு தகவல் அளிக்கபட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் இது தொடர்பாக சந்தேக மரணம் வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், மாணவி கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்த்தாகவும் நந்தினி அதற்காக சிகிச்சையும் எடுத்துகொண்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

மேலும் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை பரிசோதனைக்கு பின் மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவசர ஊர்தி மூலம் கோவை விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கார்கோ விமானம் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்டது.

மேலும் மாணவியின் தற்கொலைக்கு மன உளைச்சல்தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பாக பீளமேடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 691

0

0