விழுப்புரம் பழையப் பேருந்து நிலையம் அருகே தேமுதிக சார்பில் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், கட்சியின் மாவட்டச் செயலாளருமான எல்.வெங்கடேசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி, மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகின்றன.
மத்திய, மாநில அரசுகளை அகற்ற வேண்டிய பொறுப்பு மக்களிடம் உள்ளது. அதற்கு மக்கள் முன்வர வேண்டும். கர்நாடகா மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது. அதற்கு உறுதுணையாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இருந்தன.
ஆனால், தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நதிநீரை கர்நாடக மாநில துணை முதல்வர் சிவக்குமார் தர மறுக்கிறார். இதையடுத்து, எங்களுக்கு தரவேண்டிய காவிரி நதிநீரை ஏன் தரம் மறுக்கிறீர்கள் என்று சிவக்குமார் சட்டையைப் பிடித்து கேட்க வேண்டிய இடத்தில் திமுகவினர் இருக்கின்றனர். ஆனால், கேட்க மறுக்கின்றனர்.
கொள்ளையடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை தந்து விட்டு, ஆட்சிக்கு வந்து விட்டு மக்களுக்கு திமுக எதையும் செய்யாமல் வஞ்சித்து வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை சந்தி சிரிக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்ததும் மாதந்தோறும் மின் கணக்கீட்டு செய்யப்படும் என தெரிவித்தார்கள். ஆனால், அதனை செய்யாமல் எல்லாத்துறைகளிலும் ஊழல் செய்யும் ஆட்சியாக திமுக அரசு செயல்படுகிறது என்று பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், 300 பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.