சுதந்திர தின விழாவையொட்டி நடந்த கிராமசபைக் கூட்டத்தில் ஊராட்சிமன்ற தலைவரை கவுன்சிலர் ஒருவர் செருப்பால் அடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மேலகோட்டையூர் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 9வது வார்டு கவுன்சிலர் குருநாதன் மற்றும் அவரது மனைவி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, கோபத்தின் உச்சிக்கு சென்ற கவுன்சிலர் குருநாதனின் மனைவி ஊராட்சிமன்ற தலைவரின் உறவினரை கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. போலீசார் முன்னிலையிலேயே, இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரை வார்டு கவுன்சிலர் குருநாதன், தனது காலில் இருந்த செருப்பை கழற்றி அடிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் கிராம சபை கூட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து குருநாதனின் ஆதரவாளர்கள் கேளம்பாக்கம் – வண்டலூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனிடையே, செருப்பால் அடிக்க முயன்றதாக கவுன்சிலர் மீது ஊராட்சிமன்ற தலைவர் போலீசில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து ஊராட்சிமன்ற தலைவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.