கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து ஓசூர் வழியாக கெலமங்கலத்திற்கு கஞ்சா கடத்தி கொண்டு செல்வதாக ஒசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து போலீஸார் ஒசூர் அருகே உள்ள பைரமங்கலம் பிரிவு சாலையில் திடீர் வாகன சேதனையில் ஈடுப்பட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் போலீசாரிடம் முன்னுக்குபின் முரனாக பேசியதால், சந்தேகமடைந்த போலீஸார் அவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தை சோதனை செய்துள்ளனர்.
சோதனையில் இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, அதில் 8 கிலோ கஞ்சா பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
பிடிபட்ட இருவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் தாசிரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஆனந்தன் (31) மற்றும் அவரது மனைவி ராணி (32) என்பதும் இருவரும் கெலமங்கலம் அருகே ஏ.செட்டிப்பள்ளி கிராமத்தில் வீடு வாடகை எடுத்து கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து கஞ்சா கடத்திய குற்றத்திற்காக கணவன் மனைவி இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 8 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொருட்களின் மதிப்பு சுமார் 80 ஆயிரம் ரூபாய் எனக்கூறப்படுகிறது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.