கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து ஓசூர் வழியாக கெலமங்கலத்திற்கு கஞ்சா கடத்தி கொண்டு செல்வதாக ஒசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து போலீஸார் ஒசூர் அருகே உள்ள பைரமங்கலம் பிரிவு சாலையில் திடீர் வாகன சேதனையில் ஈடுப்பட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் போலீசாரிடம் முன்னுக்குபின் முரனாக பேசியதால், சந்தேகமடைந்த போலீஸார் அவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தை சோதனை செய்துள்ளனர்.
சோதனையில் இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, அதில் 8 கிலோ கஞ்சா பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
பிடிபட்ட இருவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் தாசிரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஆனந்தன் (31) மற்றும் அவரது மனைவி ராணி (32) என்பதும் இருவரும் கெலமங்கலம் அருகே ஏ.செட்டிப்பள்ளி கிராமத்தில் வீடு வாடகை எடுத்து கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து கஞ்சா கடத்திய குற்றத்திற்காக கணவன் மனைவி இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 8 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொருட்களின் மதிப்பு சுமார் 80 ஆயிரம் ரூபாய் எனக்கூறப்படுகிறது.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
This website uses cookies.