தமிழகம்

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில் வசித்து வருகின்றனர்.

இன்று மதிய வேளையில் இவரது வீட்டிற்கு வந்த இரண்டு வாலிபர்கள் குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என்று வாசலில் நின்று கேட்டுள்ளனர். வீட்டின் முன் பகுதி இரும்பு கதவு தாளிடப்பட்டிருந்தது.

இதையும் படியுங்க: திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

வீட்டிலிருந்த தம்பதி தண்ணீர் கேட்டு வந்தவர்களிடம் மறுப்பு தெரிவித்து விட்டு அனுப்பிவிட்டனர். ஆனால் அந்த இரண்டு வாலிபர்கள் பக்கத்து வீட்டு மாடி படியில் ஏறி மாதவராஜ் வீட்டுக்குள் நுழைந்தனர்.

பின்னர் மாதவராஜை தாக்கிவிட்டு பிரேமாவின் கழுத்தில் இருந்த ஏழு சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு, அவர்களது செல்போனையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்படவே, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தப்பி ஓடிய கொள்ளையர்கள் முகம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அதனைக் கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இது குறித்து மாதவராஜ் கூறும்போது தண்ணீர் கேட்டு வந்தவர்களில் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்களது வீட்டில் வெள்ளையடிப்பதற்காக வந்தவர். அதனால் காலையில் அவர் தண்ணீர் கேட்டு வந்தபோது தண்ணீர் கொடுத்தோம்.

பின்னர் மதியம் திரும்பவும் வந்து தண்ணீர் கேட்டபோது இல்லை என்று மறுத்து அனுப்பி விட்டோம். அதன் பிறகு தான் அவர்கள் பக்கத்து வீட்டு மாடிப்படியில் ஏறி வீட்டுக்குள் நுழைந்து தங்களை மிரட்டி ஏழு சவரன் நகையை பறித்துக் கொண்டு சென்று விட்டனர் என்றார். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.