தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள், நடிகைகள் கொடிக்கட்டி பறந்தாலும், ஒரு சில நடிகர் நடிகைகள் இணைந்து நடித்திருக்க மாட்டார்கள். அவர்கள் ஏன் ஜோடி சேரவில்லை என்ற வருத்தம் சினிமா பிரியர்கள் இடையே இருக்கும்
அப்படி ஒரு காலத்தில் பாப்புலராக இருந்த நடிகர் நடிகை தற்போது இணைந்து நடிக்க உள்ளனர். அது வேறு யாரும் இல்லை மைக் மோகன் தான். இவர் நடித்த படங்கள் எல்லாம் வெள்ளி விழாதான்.
அப்போதே தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வர வேண்டிய மோகன், சில நயவஞ்சகர்களால் எய்ட்ஸ் என்று வதந்தி பரவப்பட்டு மோகனை வீட்டிலேயே உட்கார வைத்து விட்டனர்.
80களில் சினிமாவுக்குள் நுழைந்த அத்தனை நடிகைகளுடன் நடித்த இவர், 90களில் சினிமாவைவிட்டு ஓரங்கட்டப்பட்டார். மீண்டும் சினிமாவுக்கு வர எண்ணி சுட்ட பழம் என்ற படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு நுழைந்தார்.
ஆனால் அந்த படம் சுத்தமாக ஓடவில்லை. இதனால் மீண்டும் வீட்டிலேயே முடங்கினார். இந்த நிலையில் 90களில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த குஷ்புவுடன் இணைந்து திரைக்கு வருகிறார்.
இருவரும் இதுவரை ஜோடி சேர்ந்து நடித்ததில்லை. இந்த குறையை போக்க ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார். விஜய் ஸ்ரீ இயக்கும் படத்தில் மோகன் மற்றும் குஷ்பு நடிக்க உள்ளனர். இந்த தகவலை நடிகை குஷ்பு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
தனது நீண்ட நாள் கனவு நனவாகி உள்ளதாக பெருமைப்படும் குஷ்பு, தெலுங்க மௌன கீதம் (தமிழில் நெஞ்சத்தை கிள்ளாதே) படம் பார்த்து ரசிகையானதாகவும், இந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்த இயக்குநருக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.