புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த ராமசாமி என்பவருக்கு சொந்தமான 191 சென்ட் நிலத்தை கடந்த 1984ல் ஆதிதிராவிட குடியிருப்பு கட்டுவதற்காக கையகப்படுத்த சென்ட் ஒன்றுக்கு 450 ரூபாயை நீதிமன்றம் நிர்ணயித்த நிலையில் ராமசாமிக்கு மொத்தம் உள்ள தொகையில் 3.98 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை இதனால் வரை வரவில்லை என்று கூறி ராமசாமி புதுக்கோட்டை மாவட்ட சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் ராமசாமிக்கு கொடுக்க வேண்டிய தொகைக்கு வட்டியுடன் சேர்த்து 5,28,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டும் மாவட்ட நிர்வாகம் இதனால் வரை கொடுக்காததால் சார்பு நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அசையும் பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தைச் சேர்ந்த நடேசன் என்பவரிடம் ஆதிதிராவிட குடியிருப்பு கட்ட 1992ல் 186 சென்ட் நிலத்தை கையகப்படுத்த ஒரு சென்டருக்கு 1500 ரூபாயை நீதிமன்றம் நிர்ணயத்த நிலையில் மொத்த தொகையிலிருந்து 4,71,438 ரூபாயை வழங்காததால் அவர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் நீதிமன்றம் அவருக்கு கொடுக்கவேண்டிய தொகைக்கு வட்டியுடன் சேர்த்து 7,58,000 ரூபாயை நடேசனுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் இது நாள் வரை மாவட்ட நிர்வாகம் வழங்காததால் சார்பு நீதிமன்றம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அசையும் பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து இரு வேறு வழக்குகளிலும் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள சார்பு நீதிமன்ற உத்தரவிட்டதை தொடர்ந்து இன்று ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்ற அமினா,பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் வருகை தந்ததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தற்பொழுது துணை ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
This website uses cookies.