கள்ளக்குறிச்சி : ரிஷிவந்தியம் அருகே காட்டுப்பன்றிக்கு வைத்த வெடியை கடித்த பசுவுக்கு வாய் கிழிந்ததால் சம்பவத்தில் ஈடுபட்ட முதியவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் காட்டுசெல்லூர் இந்த கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்முருகன் (வயது 33). இவருக்கு சொந்தமான பசுமாடு அதே கிராமத்தைச் சேர்ந்த வேல்மயில் என்பவரது கரும்பு நிலத்தின் வரப்பில் மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது வரப்பில் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிமருந்தை கடித்ததில் பசு மாட்டின் வாய் கிழிந்தது. இதுகுறித்து மாட்டின் உரிமையாளர் செந்தில்முருகன் கொடுத்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.
போலீசாரின் விசாரணையில், மேமாலூர் கிராமத்தை சேர்ந்த குழந்தைசாமி(வயது 61) என்பவர் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக வேல்மயில் என்பவரது விவசாய வரப்பில் அவருக்கு தெரியப்படுத்தாமல் வெடிமருந்து வைத்திருந்தார் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, அவரிடம் போலீசார் விசாரணையில் செய்ததில் குழந்தைசாமி காட்டுப்பன்றிகளை வெடி வைத்து பிடித்து அதன் இறைச்சியை விற்பனை செய்வதே வழக்கமாக வைத்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனை அடுத்து குழந்தைசாமியை கைது செய்த ரிஷிவந்தியம் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மான் வேட்டையாடிய வழக்கில் ரிஷிவந்தியம் போலீசார் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டவர் இந்த குழந்தைசாமி என்பது குறிப்பிடத்தக்கது. வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட மாட்டின் மதிப்பு சுமார் 40ஆயிரம் ஆகும்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.