அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கரைப்பு.. விசாரணையில் பகீர் : விருதுநகர் மக்கள் அதிருப்தி!!
விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னமூப்பன்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கும் இந்தப் பள்ளியில், 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை சிற்றுண்டிக்கு வந்த சமையக்காரர்கள் குடிநீர் தொட்டியில் இருந்த நீரை பயன்படுத்த முயற்சித்தனர். அப்போது அதிலிருந்து துர்நாற்றம் வந்ததாகவும் இது குறித்து தலைமை ஆசிரியரிடம் தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து தலைமை ஆசிரியர், சின்டெக்ஸ் தொட்டியில் இருந்த தண்ணீரை பார்த்துள்ளார். அப்போது அதில், மாட்டுச் சாணம் கலக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து உடனடியாக அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் ஊர் மக்கள், உடனடியாக சின்டெக்ஸ் தொட்டியை அப்புறப்படுத்தி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவ மாணவிகள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணத்தை கரைத்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
This website uses cookies.