நத்தத்தில் மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மெக்கானிக் பலி- சிசிடிவியில் பதிவான பத பதைக்கும் வீடியோ காட்சிகள்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ராக்காச்சிபுரத்தை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது42) இவர் நத்தம் இ.பி அலுவலகம் முன்பாக மெக்கானிக் ஷாப் வைத்துள்ளார். அழகர்சாமிக்கு மனைவி ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
நேற்று இரவு நத்தம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டு அவரும் அவரது உறவினர் மாணிக்கம் என்பவரும் இருசக்கர வாகனத்தில் ராக்காச்சி புரத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்பொழுது காந்திஜி கலையரங்கம் முன்பாக மாடு குறுக்கே வந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதால் ஏற்றப்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்த அழகர்சாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அழகர்சாமி இன்னும் சில தினங்களில் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல இருந்த நிலையில் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நத்தம் பகுதி சாலைகளில் அதிக அளவில் மாடுகள் சுற்றித் திரிவதால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. விபத்து குறித்த பதபதைக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.