தமிழகம்

ஆ.ராசா கொளுத்திவிட்ட தீ.. முட்டிமோதும் திமுக – சிபிஐஎம்.. என்ன நடக்கிறது?

ஆ.ராசா, கம்யூனிஸ்ட் கட்சியினர் சுயநலவாதிகள் எனப் பேசியது தவறானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.

சென்னை: சென்னையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “ஆ.ராசா கூறியது தவறானது. அடிப்படை இல்லாதது. அதனை அவர் சரி செய்து கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட் தலைவர்கள் நீர்த்துப் போகவில்லை” எனத் தெரிவித்தார்.

காரணம், “தத்துவத்தின் மீது தலைவர்கள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை குறையக் குறைய தத்துவம் தோற்றுவிடும். தத்துவத்தில் கோளாறு இல்லை, கம்யூனிசத்தில் கோளாறு இல்லை, கம்யூனிசம் செம்மையானது. ஆனால் கம்யூனிசத் தத்துவத்தை எடுத்து வந்த தலைவர்கள் நீர்த்து போன காரணத்தினால், சுயநலவாதிகளாக மாறிவிட்ட காரணத்தினால் கொள்கை நீர்த்துப் போய் விட்டது, கொள்கை தோற்றுவிட்டது” எனத் தெரிவித்து இருந்தார்.

முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு, விழுப்புரத்தில் கடந்த ஜனவரி 2 முதல் 5ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் பேசிய அப்போதைய சிபிஐஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் பட்டா கேட்டு போராடினால், தொழிலாளர்கள் உரிமைக்காக போராடினால் உடனடியாக போலீசார் வழக்குப் பதிவு செய்கின்றனர்.

தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது. விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் மாநாட்டுப் பேரணிக்கு அனுமதி மறுத்து, கடைசி நேரத்தில் அனுமதி தந்தீர்கள். பின்னர், கட்சியின் நிர்வாகிகளை அழைத்து பேரணிக்கு அனுமதியில்லை எனத் தெரிவிப்பது ஏன்?

இதையும் படிங்க: முதல் விக்கெட்… ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யார் யார் போட்டி?

எதிர்க்கட்சியாக இருந்தாலும் அனைத்துக் கட்சிகளும் நடத்தும் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். தமிழகத்தில் பல்வேறு மாடல்கள் இருந்தாலும் இடதுசாரிகள் மாடல் தான் சிறந்தது” என கடுமையாக குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு, முரசொலி பத்திரிகை எதிர்மறை கருத்தை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.