Categories: தமிழகம்

நொறுங்கிய AUDI கார்… சாலை விபத்தில் பிரபல இசையமைப்பாளர் பலி… அதிர்ச்சியில் திரையுலகம்!!!

சாலை விபத்தில் பிரபல இசையமைப்பாளர் பலி… அதிர்ச்சியில் திரையுலகம்!!!

சென்னையைச் சேர்ந்த நண்பர்களான தசி என்கிற சிவக்குமார், மூவேந்திரன், தமிழ் அடியான், நாகராஜ் என நான்கு பேரும் நாகராஜன் ரியல் எஸ்டேட் பிசினஸ் சம்பந்தமாக கேரள மாநிலத்திற்கு சென்று விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளனர்.

அப்போது திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பழங்கரை பகுதியில் பைபாஸில் சென்று கொண்டிருக்கும் பொழுது ஆடி காரின் முன்பக்க டயர் வெடித்ததில் நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டு சுவற்றில் மோதியது.

இந்த விபத்தில், திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியல்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றி வரும் தசி என்கிற சிவக்குமார் (வயது 49) சென்னையை பூர்வீகமாக கொண்ட ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ் அடியான் (வயது 50)என இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள வாட்டாகுடி கிராமத்தில் பிறந்தவர் சிவகுமார். அவருடைய தந்தை பாரதிமோகன். யார் குற்றவாளி, அத்தான் என்ற இரண்டு திரைப்படங்களைத் தயாரித்து அதற்கு பாடல்களும் எழுதியவர். தனது தந்தையுடன் ஸ்டுடியோக்களுக்கு சென்று வந்த சிவகுமாருக்கு திரையுலகில் ஈர்ப்பு வந்தது. அதனையடுத்து திரையுலகில் பின்னணி இசைப்பிரிவில் முதலாக பணிக்கு சேர்ந்து சிறிது சிறிதாக முன்னேறினார்.

இசையமைப்பாள் தஷி

மலையாளப் படங்களில் பணியாற்றிய போது குட்டி கிருஷ்ணன் என்ற தயாரிப்பு நிர்வாகி அறிமுகமானார். அவரது பரிந்துரையில் சிவகுமாருக்கு ஒரு படத்துக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. தந்த்ரா என்ற அந்த படத்தின் பின்னணி இசைக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது மலையாள திரை உலகில் அவருக்கு கிடைத்தது. திரை உலகத்திற்காக தனது பெயரை வீ.தஷி என்று மாற்றிக் கொண்டார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், ஒரியா, வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்துள்ள தஷி, இதுவரையில் சுமார் 90 புது பாடகர்களையும், 160 பாடலாசிரியர்களையும் இசை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். 49 வயதான அவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

மேலும் ரியல் எஸ்டேட் அதிபராக நாகராஜ் (வயது 50) மற்றும் இயக்குனரான மூவேந்திரன் (வயது 55) பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்திலிருந்து உயிரிழந்த இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து,அவிநாசி போலீசார் விசாரித்து வருகின்றனர்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

3 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

5 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

5 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

6 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

7 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

7 hours ago

This website uses cookies.