திருநெல்வேலியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மகாராஜன்(25). இவர் உடன்குடி அனல்மின் நிலைய திட்டப்பணிகளில் பணிபுரிந்து வருகிறார்.
அதே போல் திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலுமூலைக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகன் வனம்(25). இவர் மேஸ்திரி வேலை செய்து வருகிறார்.
இவர் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவரை அழைத்துக் கொண்டு குலசேகரப்பட்டிணம் பகுதிக்கு மேஸ்திரி வேலைக்கு இன்று காலை சென்றுள்ளார்.
இவர்கள் இருவரது வாகனமும் திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாமொழி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் இரண்டு வாகனங்களும் தூக்கி வீசப்பட்டது.
இந்த விபத்தில் மகாராஜன் மற்றும் வனம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வனத்துடன் வந்த மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த குலசேகரப்பட்டிணம் போலீசார் இறந்தவர்கள் உடலை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த மற்றொருவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து திருசெந்தூர்போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய சம்பவத்தில் இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.