வடசென்னை திருவொற்றியூர் சத்திய மூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ரவுடி லோகேஷ்(32). இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார்.
இந்நிலையில் புதுவண்ணாரப்பேட்டையில் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த லோகேஷை பிரகாஷ் என்பவர் தனது கூட்டாளிகள் 5 பேருடன் சேர்ந்து சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில், தலை கை கால்கள் என படுகாயமடைந்த லோகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், புதுவண்ணாரப்பேட்டை நாகூர் தோட்டத்தை சேர்ந்த சொட்டை பிரகாஷ், மதன், திருவொற்றியூர் சாத்து மாநகரை சேர்ந்த சாமியார் கார்த்தி, காசிமேடு அண்ணாநகரை சேர்ந்த தண்டபாணி, சுரேந்தர், பிரகாஷ்ராஜ் ஆகியோரை பழவேற்காட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
இதில், சொட்டை பிரகாஷ், திருவெற்றியூர் மாட்டு மந்தை மேம்பாலத்திலிருந்து தப்பிக்க முயன்றபோது மேலிருந்து கீழே விழுந்ததில், வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.