கோவை: கோவையில் ஒரே வாக்கு மையத்தில் அதிகளவில் பொதுமக்கள் சேர்க்கப்பட்டதால் வாக்கு செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது கோவை வடவள்ளி பகுதிக்கு உட்பட்ட 38வது வார்டில் உள்ள வாக்கு மையங்களில் அதிகளவில் பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று தங்களின் வாக்குகளை செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் வடவள்ளி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 418 என்ற வாக்கு மையத்தில் அதிகளவில் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடியதால் நீண்ட வரிசையில் நின்று வாக்கு செலுத்தினர்.
ஒரே மையத்தில் பல வாக்காளர்களைச் சேர்த்ததால் இப்படி அவதிக்குள்ளானதாக மக்கள் தெரிவித்தனர். அதே வாக்குப்பதிவு மையத்தில் மற்ற நான்கு மையங்களில் ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தனியார் அறக்கட்டளை சார்பில் 200 மாற்றுத் திறனாளிகளுக்கு தலைக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் நடைபெற்றது, இந்நிகழ்வில்…
மதுரை முருக பக்தர்கள் மாநாடு நாளை (ஜுன் 22) மதுரையில் அமைந்துள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கீழடி ஆய்வுகள் குறித்து சம்பந்தமாக நேற்றைய தினமே முன்னால் அமைச்சர்…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான…
11 வது சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் முன்னாள்…
ரவி மோகன் விவகாரம் தான் தற்போது கோலிவுட்டில் செம ஹாட்டான் விவகாரம். மனைவி ஆர்த்தியை பிரிந்து வந்த ரவி மோகன்…
This website uses cookies.