சேலம் உடையப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் மகன் தமிழ்ச்செல்வன் (23). இவருக்கும் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தஇளம் பெண்ணுக்கும் நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
ஆடி மாதத்தில் புது பெண் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். பெண்ணின் உறவினர் ஒருவர் புதுப்பெண்ணின் தொலைபேசியை பார்த்த போது ஆபாச குறுஞ்செய்தி வந்துள்ளது.
இது குறித்து பெண்ணின் பெற்றோர் உறவினர்கள் கேட்டபோது பெண் அளித்த தகவல் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெண்ணின் கணவர் தமிழ்ச்செல்வன் இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் (இன்ஸ்டாகிராம்) வெளியிட்டு பல ஆண்களிடம் விலை பேசி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் தெரியவந்தது.
மேலும் இதுகுறித்து உறவினர்களுக்கு தெரிய வந்ததை எடுத்து அப்பெண் எலி மருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் தமிழ்ச்செல்வன், மற்றும் பாலியல் தொந்தரவு கொடுத்த நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த நடராஜ் (42) ஆகிய இருவர் மீது பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், தகவல் தொழிற்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த ஆத்தூர் மகளிர் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்த மொபைல் போனை பறிமுதல் அதில் உள்ள வீடியோக்களை ஆய்வு செய்தால் இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்பட கூடும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து மனைவியை பார்க்கச் சென்ற போது தன்னை தாக்கியதாக தமிழ்ச்செல்வன் அளித்த புகாரின் அடிப்படையில் ஆத்தூர் நகர போலீசார், பெண்ணின் பெற்றோர் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
This website uses cookies.