திருப்பூரில் மனைவியை தவறாக பேசியதை தட்டிக்கேட்ட கணவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் கல்லூரி சாலை துவாரகை நகரில் பிரவீன் (வயது 33), தனது மனைவி ராணியுடன் வசித்து வருகிறார். கும்பகோணத்தை சேர்ந்த இவர் திருப்பூரில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவரின் வீட்டின் அருகே குடியிருக்கும் அண்ணாமலை (வயது 40) என்பவர் ராணியை நேற்று முன்தினம் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பிரவீன் மது போதையில் அண்ணாமலை வீட்டின் முன்பு கை, கால்களை உடைத்து விடுவேன் என தகராறு செய்துள்ளார்.
ஆனால் அண்ணாமலை சொந்த ஊருக்கு சென்றிருந்ததால் பூட்டிய வீட்டின் முன்பு கத்தி உள்ளார். இதனை அருகில் இருந்த நபர்கள் அண்ணாமலைக்கு தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அண்ணாமலை நேற்று இரவு திருப்பூருக்கு திரும்பி வந்து மது போதையில் பிரவீன் உடன் தகராறில் ஈடுபட்டார். இதில் தான் மறைத்து வைத்திருந்த காய்கறி வெட்டும் கத்தியால் பிரவீனை அண்ணாமலை குத்தி விட்டு தப்பி ஓடினார்.
அருகில் இருந்த பொதுமக்கள் பிரவீனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் வடக்கு போலீசார் அண்ணாமலையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.