கடலூர் அருகே அமைச்சர் வர தாமதமானதால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சாப்பாட்டு தட்டுகளை அதிகாரிகள் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆகஸ்டு 25-ந் தேதிமுதல் மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும், இதற்காக இந்த நிதியாண்டில் ரூ.404 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்ற அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.
அந்த வகையில், கருணாநிதி படித்த திருக்குவளை பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்து தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உணவு பரிமாறினார். அதனை தொடர்ந்து மாணவர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டார்.
முதலமைச்சர் தொடங்கி வைத்த இந்த திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் முன்னலையில் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த வகையில், கடலூர் மாவட்டம் பட்டூர் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை அமைச்சர் கணேசன் தொடங்கி வைப்பதாக இருந்தது. முதலமைச்சர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு, அனைத்து மாணவர்களுக்கு சாப்பாடு தட்டில் போட்டு கொடுக்கப்பட்டது.
ஆனால், அமைச்சர் கணேசன் வர தாமதமானதால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சாப்பாட்டு தட்டை, அதிகாரிகள் மீண்டும் எடுத்துள்ளனர். இது மாணவர்களிடையேயும், பெற்றோரிடையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில், அமைச்சரின் வருகை தாமதமானதால், மாணவர்களின் சாப்பாட்டு தட்டை பறித்தது நியாயமா..? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.