தமிழகம்

திமுக கவுன்சிலர் மீது காரித்துப்பிய திமுக செயலாளர்.. கடலூர் கூட்டத்தில் பரபரப்பு!

கடலூர் அருகே, திமுக கவுன்சிலர் மீது திமுக நகர்மன்ற துணைத் தலைவர் காரித்துப்பிய சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

கடலூர்: சட்டசபையில் சட்டை கிழியத் தான் செய்யும், சண்டை வரத்தான் செய்யும் என்றும், அங்குள்ள சேர், பெஞ்ச் ஆகியவை உடைக்கப்படும் என்றும் நாம் பல சினிமாக்களிலும், ஏன், சில நேரங்களில் நிஜ வாழ்க்கையிலும் கேள்விப்பட்டிருப்போம், பார்த்திருப்போம்.

ஆனால், இங்கு உறுப்பினர் மீது காரித்துப்பிய சம்பவம் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், முக்கியமாக, ஆளும் திமுக நகர்மன்ற துணைத் தலைவரே, திமுக கவுன்சிலர் மீது காரித் துப்பியதால் இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இது எதற்காக நடந்தது? எங்கு நடந்தது என்பதை பார்க்கலாம்.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தில், இன்று வழக்கம்போல் கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திமுக நகர்மன்றத் தலைவர் வெண்ணிலா, துணைத் தலைவர் பரமகுரு, கவுன்சிலர்கள் அதிகாரிகள் என பலரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டமும் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், 13வது வார்டு திமுக கவுன்சிலர் தனபால், தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை எனவும், நகராட்சியில் முறைகேடு நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டினார்.

திமுக கவுன்சிலரே முறைகேடு நடப்பதாக குற்றம் சாட்டியதால், அதே திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற துணைத் தலைவரும், திமுக நகரச் செயலாளருமான பரமகுரு, கவுன்சிலர் தனபால் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது ஒருகட்டத்தில் ஒருமை பேச்சு வரை சென்றதால், உறுப்பினர்க முக சுழிப்பு அடைந்தனர்.

இதையும் படிங்க: மனைவி, ரிசப்ஷனிஸ்ட் உடன் சேர்ந்து ரூ.17 லட்சம் அபேஸ்.. பாஜக பிரமுகரின் மோசடி வெளியானது எப்படி?

மேலும், ஒருபடி மேலே சென்ற திமுக நகர்மன்ற துணைத் தலைவர் பரமகுரு, திமுக கவுன்சிலர் தனபால் மீது காரித் துப்பியதால் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. இதனை சற்றும் எதிர்பார்க்காத சக கவுன்சிலர்கள், இருவரையும் சமாதானம் செய்ய முயற்சித்தனர்.

இதனிடையே, இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சமாதானம் செய்ய முறபட்டனர். இறுதியில், இருவரையும் சமாதானப்படுத்தினர். இவ்வாறு பெண் நகர்மன்றத் தலைவர் உள்பட பல பெண் உறுப்பினர்கள் இருந்த அரசு மேடையில், ஆளும் திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்களும், அநாகரீகப் பேச்சுகள் மட்டுமின்றி, காரித் துப்பிய நிகழ்வு அரசியல் மேடையில் பேசுபொருளாகியுள்ளது.

Hariharasudhan R

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

10 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

10 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

11 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

12 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

12 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

13 hours ago

This website uses cookies.