கடலூர் அருகே வீதியின் குறுக்கே காரை நிறுத்தி சாலை போடும் பணியை தடுத்து நிறுத்திய திமுக ஒன்றிய கவுன்சிலரால் பரபரப்பு நிலவியது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவினங்குடி ஊராட்சியில் 15 ஆவது நிதி குழு மானிய நீதியில் சாலை அமைக்கும் பணி முறையாக அளவீடு செய்து நடைபெற்றது.
இந்த நிலையில் அங்கு வந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் பாக்கியராஜ் என்பவர் சாலை போடும் இடம் தனக்கு சொந்தமான இடம் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை பொருட்படுத்தாத ஊராட்சி நிர்வாகம், தொடர்ந்து சாலை போடும் பணியில் ஈடுபட்டது. பின்னர் ஒன்றிய கவுன்சிலர் பாக்கியராஜ் தனது காரை சாலை போட விடாமல் தடுக்கும் விதமாக வீதியின் நடுவில் நிறுத்தியுள்ளார். இதனைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர் அதிமுகவை சேர்ந்தவர் என்பதால் திமுக ஒன்றிய கவுன்சிலர் இதுபோல் நடந்து கொள்வதாகவும், அதிகாரிகள் இதனை கண்டு கொள்வதில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
This website uses cookies.