அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் கஞ்சா செடி வளர்த்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஒசூர் நல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராமங்களில் ரகசியமாக கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வருவதாக நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து நல்லூர் போலீசார் தனிப்படை அமைத்து ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி, ஆவலப்பள்ளி உள்ளிட்ட கிராம பகுதிகளில் தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர்
அப்போது கெலவரப்பள்ளி கிராமத்திற்கு அருகே மிளகாய் தோட்டத்தை ஒட்டிய அரசு புறம்போக்கு நிலத்தில் புற்கள், புதர்கள் வளர்ந்த பகுதியில் ரகசியமாக கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் அங்கு வளர்க்கப்பட்ட 5 கஞ்சா செடிகளை பிடுங்கி அகற்றினர். போலீசாரின் விசாரணையில் கெலவரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி முனிராஜ் (48) என்பவர் விற்பனை செய்வதற்காக கஞ்சா செடிகளை உரமிட்டு வளர்த்து வந்தது தெரியவந்தது
அதனைதொடர்ந்து முனிராஜை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.