கோவை: உலக திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இன்று உலக திருநங்கைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் கோவை மாவட்ட திருநங்கைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் (நடனம், கோலம், பேச்சுப்போட்டி, ஆடை அலங்கார அணிவகுப்பு, பாட்டு போட்டி) நடத்தப்பட்டன.
இதில் கலந்து கொண்ட 10க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பாரம்பரிய ஆடை அணிந்து அணிவகுப்பும் நடனமும் நடத்தினர். இதில் ‘திருநங்கைகளை வாழவிடு’ என்ற தலைப்பில் பேச்சு போட்டியும் நடத்தபட்டது.
இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். முன்னதாக திருநங்கைகள் அவர்களது கோரிக்கைகளை அலுவலர்களிடம் முன்வைத்தனர். மேலும் பல்வேறு அரசு திட்டங்கள் தங்களுக்கு கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.
இந்நிகழ்ச்சி மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி மகளிர் திட்ட இயக்குநர் சந்திரா முன்னிலையில் நடைபெற்றது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.