Categories: தமிழகம்

சுங்கச்சாவடி பேச்சுவார்த்தை தோல்வி.. வணிகர்கள் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் மழுப்பிய அமைச்சர்!

மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியினை அகற்றக் கோரி திருமங்கலம் வணிகர் சங்கம் சார்பில் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில்
போராட்டம் நடத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கும் நோக்கில் கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு மற்றும் போராட்டக் குழுவினருடன் இணைந்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அழைப்பு நேற்றைய தினம் விடுக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் எம் சாந்தி மற்றும் NHAI அதிகாரிகள் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு மற்றும் போராட்டக் குழுவினர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

2020 ஆம் ஆண்டு என்ன விதிமுறைகளின் படி வாகனங்களுக்கு கட்டண விளக்கு அளிக்கப்பட்டதோ அதன்படி அந்த நடைமுறைகள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

மேலும் திருமங்கலம் பகுதி மக்கள் தங்கள் ஆதார் கார்டுகளை காண்பித்து அங்கிருந்து இலவசமாக செல்லலாம் என தெரிவித்திருந்தார்.

இதனை ஏற்றுக் கொள்ளாத திருமங்கலம் பகுதி வணிகர்கள், அனுமதி இல்லாமல் இங்கு அமைக்கப்பட்ட இந்த சுங்கச்சாவடியை முற்றிலுமாக இங்கிருந்து அகற்ற வேண்டும் எனவும் 2020 ஆம் ஆண்டு என்ன நடைமுறைகள் இருந்தன என தெரிவிக்கும்படியும், இது தொடர்பாக எழுத்துப்பூர்வ கடிதம் கொடுக்கும்படி கூறினார்.

அது தலைமை இடத்தில் பேசி வாங்கப்படும் என அமைச்சர் கூறியதையடுத்து, பேச்சுவார்த்தை நடைபெற்ற இடத்தில் இருந்து வணிகர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அப்போது பேட்டியளித்த அமைச்சர் மூர்த்தி, சுங்கச்சாவடி தொடர்பான நடைபெற்ற பேச்சு வார்த்தை 100% சதவிகிதம் வெற்றி பெற்றதாக தெரிவித்தார்.

மேலும் ஏற்கனவே 2020 முதல் 23 வரை செலுத்த வேண்டிய கட்டணம் குறித்து நோட்டீஸ் அனுப்பியது தொடர்பான கேள்விக்கு, அது செலுத்த தேவையில்லை என தெரிவித்த அமைச்சர், 2020 ஆம் ஆண்டு என்ன நடைமுறைகள் உள்ளன என கேள்விக்கு, அதெல்லாம் இருக்கு இருக்கு என கூறியபடியே கிளம்பினார்.

மேலும் திருமங்கலம் பகுதி மக்களுக்கு கட்டண விளக்கு தொடர்பான எழுத்துப்பூர்வ அறிவிப்பு உள்ளதா என கேள்விக்கு, அதெல்லாம் தலைமையில பேசிட்டு இருக்காங்க அது ரிட்டனா முடிவாகிடும் என தெரிவித்து விட்டு சென்றார்.

பேச்சுவார்த்தை நடைபெற்ற இடத்தில் இருந்து வெளிநடப்பு செய்த வணிகள் கொடுத்த பேட்டியின்போது, 2020 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட விதிகளின்படி திருமங்கலம் பகுதி மக்கள் மற்றும் வணிகர்கள் ஆதார் கார்டுகளை காண்பித்து செல்லலாம் என அமைச்சர் தெரிவித்தார்.

ஆனால் 2020 ஆம் ஆண்டு என்ன விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன அதை தெரிவிக்கும்படி கூறினால், அதை தெரிவிக்க மறுக்கிறார். எங்களின் கோரிக்கையை இந்த சுங்கச்சாவடியை இங்கிருந்து அகற்ற வேண்டும் என்பதே, ஆகையால் ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை நடைபெறவிருக்கும் கடையடைப்பு மற்றும் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு நடைபெறவிருக்கும் போராட்டம் நடைபெறும் என்றும், இன்று நடைபெற்ற இந்த இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையிலும் எந்த ஒரு உடன்பாடும் எட்டப்படவில்லை, நாளை போராட்டம் தொடரும் என பேட்டியில் தெரிவித்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

8 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

10 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

10 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

10 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

11 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

12 hours ago

This website uses cookies.