மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஆட்டுக்குளம் விளக்கில் மேலூர் – சிவகங்கை சாலையின் குறுக்கே இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதில் கேக் வைத்து பிறந்தநாள் கொண்டாடிய மாணவர்கள் வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாக பரவியது.
அந்த வீடியோவில் சாலையை மறித்து இடையூறு செய்யலாமா என்று கேட்கும் முதியவரை மாணவர் ஒருவர் முகத்தில் ஸ்பிரே அடித்து அவமரியாதை செய்கிறார்.
வீடியோ வைரலானதை தொடர்ந்து மேலூர் டிஎஸ்பி ஆர்லிஸ் ரெபோனி அந்த மாணவர்களை பிடிக்க தனிப்படை ஒன்றை அமைத்தார்.
அதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் ஆட்டுக்குளத்தைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் கல்லூரி மாணவர் சிவணி (19) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவரையும் கைது செய்தனர்.
இவர்கள் மீது சாலையின் குறுக்கே தடுப்பு அமைத்து வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல், முதியவர்களை அவமரியாதை செய்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பிரதான சாலையில் இப்படி ஒரு நிகழ்வு நடந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.