மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஆட்டுக்குளம் விளக்கில் மேலூர் – சிவகங்கை சாலையின் குறுக்கே இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதில் கேக் வைத்து பிறந்தநாள் கொண்டாடிய மாணவர்கள் வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாக பரவியது.
அந்த வீடியோவில் சாலையை மறித்து இடையூறு செய்யலாமா என்று கேட்கும் முதியவரை மாணவர் ஒருவர் முகத்தில் ஸ்பிரே அடித்து அவமரியாதை செய்கிறார்.
வீடியோ வைரலானதை தொடர்ந்து மேலூர் டிஎஸ்பி ஆர்லிஸ் ரெபோனி அந்த மாணவர்களை பிடிக்க தனிப்படை ஒன்றை அமைத்தார்.
அதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் ஆட்டுக்குளத்தைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் கல்லூரி மாணவர் சிவணி (19) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவரையும் கைது செய்தனர்.
இவர்கள் மீது சாலையின் குறுக்கே தடுப்பு அமைத்து வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல், முதியவர்களை அவமரியாதை செய்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பிரதான சாலையில் இப்படி ஒரு நிகழ்வு நடந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.