விடிய விடிய அதிமுகவுடன் கூட்டணி நடத்துவாரு… விடிந்த பின் ஆட்டுக்குட்டி கூட கூட்டணி வைப்பாரு : பாமக பற்றி சி.வி. சண்முகம் தாக்கு!
விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கரும்பு விவசாயிகள் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி., தலைமை தாங்கி, வேட்பாளர் பாக்யராஜை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார்.
அதில் அவர் கூறியதாவது, ஸ்டாலின், மோடி எதிரிபோல் மக்களிடம் நாடகமாடி வருகின்றனர். இவர்கள் இருவருமே மக்களை ஏமாற்றி வஞ்சிக்கின்றனர். தற்போது நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாட்டுக்கு ராஜாவாக இருந்தாலும் தமிழகத்திற்கு பூஜா தான் எனவும் கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்க வேண்டும். பா.ஜ.,வோடு இணைந்ததால் சிறுபான்மை ஓட்டுகளை இழந்தது போல பா.ம.க.வோடு இணைந்ததால் தோல்வி ஏற்பட்டது. தேர்தலுக்கு தேர்தல் அணி மாறும் பா.ம.க., கடை விரித்து கட்சியை ஏலம் விடுகின்றனர்.
நெய்வேலி என்.எல்.சி., க்காக போராட்டம் நடத்திய அன்புமணி, அங்கு 3-வது சுரங்கத்தை மூட மோடி ஆதரவோடு நடவடிக்கை எடுப்பாரா என தெரியவில்லை. குறைந்தபட்சம் இந்த தேர்தலில் வாக்குறுதியாவது தருவாரா. பா.ம.க., அவர்கள் சார்ந்துள்ள சமூக மக்களை ஏமாற்ற வேண்டாம். நம்பிக்கை துரோகிகளுக்கு நாம் யார் என இந்த தேர்தலில் காட்ட வேண்டும்.
அமைச்சர்கள் கூட ரப்பர் ஸ்டாம்ப்களாகவே உள்ளனர். இந்த ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீரழிந்துள்ளது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை மோடி நடைபயணமாக சென்றாலும் தமிழகத்தில் காலூன முடியாது.
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
This website uses cookies.