பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணத்தை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் ரோட்டரி கிளப்ஸ் ஆஃப் கோயம்புத்தூர் ரீஜன் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் இரு சக்கர வாகன பிரச்சார பயணத்தை தொடங்கினர்.
இதனை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பயணமானது 6 இருசக்கர வாகனங்களில் கோவையில் துவங்கி நேபாளில் உள்ள காத்மண்டு வில் முடிவடைகிறது.
இதற்காக 14 நாட்களில் 7000 கிமீ பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பேசிய ரைடர்கள், தற்போது உள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
குறிப்பாக செயலி மூலம் பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேபால் செல்வதாகும் செல்லும் வழியில் உள்ள பள்ளிகள் கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்திச் செல்வதாக கூறினர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.