தமிழகம்

அண்ணா கூறியது உண்மைதான் போல.. அடித்துக்கூறும் ஜெயக்குமார்!

திருக்குறள் வாசிக்கும் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு நிதி வழங்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை: மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் 56வது நினைவு தினத்தையொட்டி, இன்று தமிழகம் முழுவதும் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட், பீகார் மாநில பட்ஜெட்டாக இருக்கிறது. பீகாரில் தேர்தல் வருவதால் அரசியல் ஆதாயத்துக்காக அம்மாநிலத்துக்கான திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் பேர் பயணிக்கக் கூடிய ரயில்வே துறை குறித்து எந்தவித அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காதது ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது.

இதையும் படிங்க: தவறைச் சுட்டிக்காட்டியதால் கொலை முயற்சியா? ஏடிஜிபி புகார்.. இபிஎஸ் கடும் கண்டனம்!

இரண்டு மாநிலங்கள் தவிர, மற்ற மாநிலங்களுக்கு பட்ஜெட்டால் பயனில்லை. திருக்குறள் வாசிக்கும் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு நிதி வழங்கவில்லை. அண்ணா கூறியதுபோலவே வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது போலத்தான் உள்ளது” எனக் கூறியுள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.