பழனி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனம் ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆபாச நடனம் ஆடக் கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது அறையில் போலீசார் முன்னிலையிலேயே நடைபெற்ற ஆபாச நடன நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது தாசரிபட்டி கிராமம்.இங்குள்ள கருப்பணசுவாமி கோவிலில் கடந்த சிலநாட்களாக திருவிழா நடைபெற்று வருகிறது.
திருவிழாவை முன்னிட்டு ஆடல் பாடல் கலைநிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டு போலீசாரின் அனுமதியுடன் ஆடல்பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று இரவு நடந்த ஆடல்பாடல் நிகழ்ச்சியில் ஐந்திற்கும் மேற்பட்ட பெண்கள் அரைகுறை ஆடையுடன் ஆபாச நடனம் ஆடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆடல்பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனம் ஆடக்கூடாது என்றும், மீறி ஆபாச நடனம் ஆடினால் உடனடியாக நிகழ்ச்சியை நிறுத்தவேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில், ஆபாச நடனம் நடைபெற்று இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போது அவர்கள் முன்னிலையில் கடைசிவரை நடனநிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் காவல்துறையினர் அதை தடுத்து நிறுத்தாமல் மௌனமாக இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.