காஞ்சிபுரம் : ரூ.5 கோடி நஷ்ட்ஈடு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. வார வாரம் திங்கட்கிழமை மக்கள் மனு அளித்து வருவதால் இன்று ஏராளமானோர் ஆட்சியரிடம் மனு அளிக்க காத்திருந்தனர்.
அப்போது அங்கு வந்த நடிகர் மன்சூர் அலிகான் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், ஸ்ரீபெரும்புதூர் வடமங்கலம் கிராமத்தில் தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நஞ்சை, புஞ்சை நிலம் உள்ளது.
அந்த நிலத்திற்கு முறையாக வரி கட்டி வருகிறேன், எனது நிலத்தை ஒட்டி கிரஷர், கல்குவாரி நடத்துபவர்கள் கடந்த 27 வருடங்களாக என் நிலத்தில் கழிவுகளை கொட்டி பாலாக்கிவிட்டனர்.
அந்த நிலத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. கழிவுகள் கொட்டி சீரழித்ததால் ரூ.5 கோடியும், அந்த மாசுகளை அகற்ற ரூ.2 கோடி என மொத்தம் ரூ.7 கோடி பெற்றுத் தர வேண்டும் என்றும், விவசாய பகுதியில் செயல்படும் கல்குவாரியை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மேலும் இந்த பகுதியில் குடிநீர் தரும் ஏரியையும் கழிவுநீரை பாய்ச்சி மாசுபடுத்தயுள்ளதால் சுற்றுச்சூழலும் மாசடைந்துள்ளது. மேலும் இது குறித்து புகார் அளிக்க தங்களுக்கு பலமுறை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் தாங்கள் பதிலளிக்கவில்லை என ஆட்சியரிடம் வருத்தத்துடன் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.