Categories: தமிழகம்

மாநில சுயாட்சிகளுக்கு ஆபத்து.. ஒற்றை ஆட்சி நடத்த பாஜக முயற்சி : அமைச்சர் பொன்முடி பரபரப்பு குற்றச்சாட்டு!!

மாநில சுயாட்சிகளுக்கு ஆபத்து.. ஒற்றை ஆட்சி நடத்த பாஜக முயற்சி : அமைச்சர் பொன்முடி பரபரப்பு குற்றச்சாட்டு!!

விழுப்புரம் காந்தி சிலை அருகிலுள்ள திமுக கட்சி அலுவலகத்தில் நீட் விலக்கு கோரி கையெழுத்து இயத்தினை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி திமுக எம் எல் ஏ புகழேந்தி கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

அதனை தொடர்ந்து பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி
சட்டமன்றத்தில் எத்தனை தீர்மானங்கள் நிறைவேற்றி கோப்புகள் அனுப்பினால் அதில் கையெழுத்திடாமல் ஆளுநர் செயல்படுவதாகவும் இதுவரை 19 கோப்புகளில் கையெழுத்திட இல்லாமல் கிடப்பில் வைத்துள்ளதால் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அரசின் முக்கியமான கோப்புகளில் கூட ஆளுநர் ரவி கையெழுத்திடாமல் அரசின் உரிமைகளை மதிப்பதில்லை என்றும் அரசு மட்டுமல்லாமல் பல்கலைக்கழக உரிமைகளையும் அவர் மதிப்பதில்லை என கூறினார்.

பல்கலைக்கழகங்களில் உள்ள சிண்டிகேட், செனட் ஆகியவைகளில் உறுப்பினராக உள்ள பேராசிரியர்கள் துணை வேந்தராக இவரை தான் நியமிக்க வேண்டும் என்று கூறும் தீர்மானத்தை ஆளுநர் மதிப்பதில்லை என்றும் தமிழக ஆளுநர் ஆளுநராக செயல்படாமல் பிரதமரின் பிரதிநிதியாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

மதுரை பல்கலைக்கழகத்தில் சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க கோப்புகள் ஆளுநருக்கு அனுப்பியும் அவர் அதற்கான நடவடிக்கை எடுக்காததால் 2 ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெறும் போது சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு வழங்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் எல்லாவற்றிற்கும் ஆளுநர் தடையாக இருப்பதாகவும், கூட்டாட்சி நாட்டினை ஒற்றையாட்சி நாடாக மாற்ற பாஜக முயன்று வருவதாகவும், ஒரு நாடு ஒரே அரசு என்று செயல்பட்டு வருவதாக கூறினார்.

மத்திய பாஜக ஆட்சியில் மாநில அரசுகளின் உரிமை பரிக்கப்படுவதாகவும் ஆளுநர் மாளிகை பாஜகவின் தலைமை அலுவலகமாக மாறியுள்ளதாகவும் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதை மாற்றியமைத்து ஒற்றை ஆட்சி அமைக்க மத்திய பாஜக அரசு முற்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஆளுநர் தான் கிளப்பி கொண்டிருப்பதாகவும் அவரே சட்ட ஒழுங்கு பிரச்சனையை கிளப்பிவிட்டு பாஜகவை சார்ந்தவர்களை வைத்து செய்துவிட்டு தமிழக அரசின் மீது குற்றஞ்சாட்டும் அளவிற்கு அவர் போய் இருக்கிறார் என்றால் இது கூட்டாட்சி தத்துவத்திற்கும் மாநில உரிமைகளுக்கே விடுக்கின்ற சவால் என்பதால் அதனை முன் வைத்து தான் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்

கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…

4 hours ago

திமுக அரசுக்கு எதிராக பேசுவதால் என் மீது வழக்கு தொடுக்க சதி நடக்கிறது : எம்எல்ஏ பரபரப்பு புகார்!

வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…

4 hours ago

வெறித்தனமான அப்டேட்! விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி?

விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…

5 hours ago

ஏதாவது ஒரு ஆக்ஷன் எடுப்பாங்க… மா விவசாயி போராட்டம் குறித்து அமைச்சரின் அலட்சிய பதில்!

வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…

5 hours ago

கூலி படத்தின் பிசினஸை அசால்டாக தட்டிவிட்டு ஓவர்டேக் செய்த ஜனநாயகன்? செம டிவிஸ்ட்டா இருக்கே!

கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…

5 hours ago

அதிமுகவை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் : விஜயபாஸ்கர் ஆவேசம்!

திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…

6 hours ago

This website uses cookies.