கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நாகர்கோவில் பிரதான சாலை மற்றும் கடற்கரை சாலைகளில் சிறார்கள் பைக் சாகசத்தில் ஈடுபடுவதோடு அதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வந்தனர் இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளை பெறும் சிறாரை அந்த வார தலையாக கருதி ஞாயிற்றுகிழமை ஏதாவது ஒரு இடத்தில் அழைத்து ஒன்றுகூடி அவரை சிறப்பித்து மீண்டும் பைக் சாகசத்தில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தது.
இதனையடுத்து அந்த சிறார்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவிட்டார்
இதனையடுத்து நேற்று குளச்சல் போக்குவரத்து பிரிவு போலீசார் திங்கள்நகர் குளச்சல் நாகர்கோவில் பிரதான சாலையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது பைக் சாகசத்தில் ஈடுபட்டு வீடியோ பதிவு செய்த 12-சிறார்களை பிடித்து அவர்களிடம் இருந்த 7-பைக்குகளை பறிமுதல் செய்ததோடு அவர்களின் பெற்றோர்களை அழைத்து தலா 11-ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு அவர்களின் செல்போன்களை ஆய்வு செய்து இன்ஸ்டா ரீல்ஸ் பதிவுகளையும் பெற்றோர்கள் முன்னிலையில் அழித்து நடவடிக்கை எடுத்தனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.