தமிழகம்

மாமியார் கண்முன்னே மருமகள் செய்த காரியம்.. கள்ளக்காதலன் போலீசில் சரணடைந்ததன் பின்னணி என்ன?

திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததாக மாமியாரை, தனது தோழி மற்றும் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மருமகள் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜசேகர் (42) – அமுல் (38) தம்பதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராஜசேகரின் தாய் லட்சுமியும் (58) இவர்கள் உடன் வசித்து வந்தார். ராஜசேகர் சொந்தமாக நெல் அறுவடை எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார்.

எனவே, பணி நிமித்தமாக அவர் அடிக்கடி வெளி மாநிலங்களுக்குச் சென்று மாதக் கணக்கில் தங்கி விட்டு வருவதை வழக்கமாக வைத்து உள்ளார். இந்த நிலையில், மனைவி அமுலுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் (42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறி, ராஐசேகர் வீட்டில் இல்லாத நேரத்தில் அமுல் வீட்டுக்கு வந்து செல்வதையும் ,அவருடன் நெருக்கமாக பழகும் நிலைக்கு வந்து உள்ளது. இதனை மாமியார் லட்சுமி கவனித்து உள்ளார். இதனால், அமுலை அமுலை அவர் பலமுறை கண்டித்து உள்ளார்.

இவ்வாறு கண்டிக்கும்போதெல்லாம், மாமியார், மருமகளுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்து உள்ளது. இந்த நிலையில், கடந்த டிசம்பர் 10ஆம் தேதி, லட்சுமி தற்கொலை செய்து கொண்டதாக திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தகவல் அளித்து உள்ளனர்.

இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், லட்சுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் முடிவில், லட்சுமியின் கழுத்தை நெரித்து தற்கொலை செய்ய வைத்திருக்கலாம் என்றும், லட்சுமியின் உடலில் காயங்கள் மற்றும் கைரேகைகள் உள்ளதாகவும் தெரிய வந்து உள்ளது.

இதனை வைத்து போலீசார் அந்தப் பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்து உள்ளனர். அப்போது அமுலுக்கும், சரவணனுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்தது போலீசாருக்கு தெரிய வந்து உள்ளது. இந்த நிலையில், நேற்று காலை நெரும்பூர் கிராம நிர்வாக அலுவலர் மகேஷை அமுல், அவரது தோழி பாரதி, சரவணன் ஆகியோர் சந்தித்து உள்ளனர்.

இதையும் படிங்க: கொண்டாட்டத்தில் கணவர்…திண்டாட்டத்தில் மனைவி…ஊரை காலி பண்ண சூப்பர் நடிகை முடிவு…!

பின்னர், தாங்கள் 3 பேரும் சேர்ந்து தான் திருமணத்தை மீறிய உறவைக் கண்டித்ததால் லட்சுமியை அடித்துக் கொலை செய்து தற்கொலை கொண்டது போல் ஜோடித்தோம் எனக் கூறியுள்ளனர். பின்னர், இது குறித்து விஏஓ மகேஷ், திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

இதன் பேரில் நேரில் சென்ற போலீசார், அங்கு இருந்த 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், கொலை செய்ததை ஒப்புக்கொண்டதையடுத்து, அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 day ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

1 day ago

This website uses cookies.