Categories: தமிழகம்

முள்ளங்கி சாம்பாரில் விஷம் வைத்து மாமியார், மாமனாரை கொன்ற மருமகள்… போலீசாரின் அலட்சியம்!!

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த, மங்கலம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலங்கையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் வேல்முருகன்.

இவர் விருத்தாச்சலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி, பூமாலை என்பவரின் மகள் கீதா-33 என்பவரை 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் கீதாவுக்கு விருத்தாச்சலத்தில் உள்ள புதுகுப்பம் பகுதியை சேர்ந்த, வெங்கடேசன் என்பவரின் மகன் ஹரிஹரன் என்பவருடன், கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கள்ளத் தொடர்பு பற்றி, கீதாவின் மாமியார் கொளஞ்சி மற்றும் மாமனார் சுப்பிரமணியனுக்கும் தெரிய வந்ததால், மருமகள் கீதாவை கண்டித்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த கீதா கடந்த 29.12.2021 ஆம் தேதி, தனது கணவரின் சொந்த ஊரான இலங்கியனூர் ஊருக்கு சென்று, கணவர் வேல்முருகன் மற்றும் மாமியார் கொளஞ்சி மாமனார் சுப்பிரமணியன் ஆகியோருக்கு முள்ளங்கி சாம்பாரில்,எலி பேஸ்ட் விஷத்தினை கலந்து கொடுத்துள்ளார்.

அப்போது விஷ சாம்பாரை சாப்பிட்ட மாமியார் கொளஞ்சி, மாமனார் சுப்பிரமணியன், பக்கத்து வீட்டு பையன் பிரபு என்பவரின் 10 வயது மகன், நித்தீஸ்வரன் ஆகிய மூவருக்கும் அடுத்தடுத்து உடல் நலவு குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி, அடுத்தடுத்து மூவரும் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆறாம் தேதி, கீதாவின் கணவர் வேல்முருகன், மங்களம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால் வழக்கு பதிந்த மங்கலம்பேட்டை காவல் துறையினர், எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல் அலட்சியமாக இருந்து வந்த நிலையில், 1 1/2 வருடம் கழித்து, சாம்பாரில் விஷம் வைத்து, மாமியார், மாமனார் மற்றும் பக்கத்து வீட்டு பையனை கொன்ற கீதா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஹரிஹரனை இன்று காலை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

நிர்வாக திறனற்ற திமுக அரசின் கையாலாகாத காவல்துறை, சிறுவன் உட்பட, மூன்று நபரை, விஷம் வைத்துக் கொன்ற ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியின் மகளை, 1 1/2 வருடம் கழித்து கைது செய்து இருப்பது என்பது, காவல்துறையின் அலட்சியப்போக்கை வெட்ட வெளிச்சமாக காட்டுவதாக, பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

2 days ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

2 days ago

This website uses cookies.