பெங்களூர்: காதல் திருமணம் செய்து கொண்ட அமைச்சர் சேகர் பாபுவின் மகள் தந்தையிடம் இருந்து பாதுகாக்க கோரி போலீஸ் நிலையத்தில் மனு அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரான பி.கே.சேகர் பாபுவின் மகள் ஜெயகல்யாணி, தனக்கும் தனது கணவர் சதீஷ்குமாருக்கும் பாதுகாப்பு கோரி காவல்துறையை அணுகியுள்ளார். தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மகள் திங்கள்கிழமை தனது தந்தையிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு பெங்களூரு போலீஸ் கமிஷனரை அணுகினார்.
அவர் போலீஸ் கமிஷனர் கமல் பந்த்திடம் ஒரு மனு கொடுத்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரின் மகள் ஜெயகல்யாணி, தான் சதீஷ்குமாரை கடந்த 6 ஆண்டுகளாக காதலிப்பதாகவும் தனது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறினார்.
சதீஷ்குமார் மீதான எனது காதலுக்கு எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் அவரை திருமணம் செய்ய முயன்றபோது, போலீசார் அவரை கைது செய்து பொய் வழக்கு பதிவு செய்து இரண்டு மாதங்கள் காவலில் வைத்திருந்தனர் என்று அவர் கூறினார். இதற்கு பின்னால் என் தந்தையின் பங்கு இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன்.
நான் 18 வயதுக்கு மேல் உள்ள பெண். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டோம் என்று ஜெயகல்யாணி கூறினார். மேலும், தமிழகம் திரும்பினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், எனவே பாதுகாப்பு கேட்டு பெங்களூரு போலீஸ் கமிஷனரை அணுகியுள்ளதாகவும் அவர் கூறினார். தமிழகத்தில் தனக்கு யாரும் உதவ மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.