கோவை ஒண்டிபுதூர் அடுத்த நெசவாளர் காலனி பகுதியில் வசித்து வருபவர் தங்கராஜ். இவருக்கு புஷ்பா என்ற மனைவியும், ஹரிணி (9), ஷிவானி (3) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.
பெயிண்டர் வேலைக்கு செல்லும் தங்கராஜ் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் போதையில் வீட்டில் அடிக்கடி தகராறு செய்துவந்துள்ளார். வீட்டுவேலைக்கு செல்லும் புஷ்பா குடும்பத்தை கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை கணவர் தங்கராஜ், தனது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் சடலமாக மிதப்பதாகவும், சடலத்தை மீட்க அக்கம்பத்தினரை அழைத்துள்ளார்.
இது தொடர்பாக அண்டை வீட்டார் போலீஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த சிங்கநல்லூர் போலீஸார் தொட்டியில் இருந்து மூவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பு வைத்தனர்.
தொடர்ந்து காலை நேரத்திலும் போதையில் தள்ளாடிய தங்கராஜை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், நேற்று இரவு மனைவிக்கும் தனக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், தனது மூத்த மகள் ஹரிணியை கொலை செய்து தண்ணீர் தொட்டியில் வீசியதாகவும், அதனைத்தொடர்ந்து மனைவி மற்றும் இளைய மகள் தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து தங்கராஜை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து மற்ற இருவரும் கொலை செய்யப்பட்டார்களா? அல்லது மகள் இறந்த துக்கத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா? என்பது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போதையில் தங்கராஜ், புஷ்பாவை அடிக்கடி தாக்கி, தகராறு செய்து வந்ததாகவும், தற்போது மூவரையும் கொலை செய்து விட்டதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்
கோவையில் தாய் மற்றும் இரு குழந்தைகள் தண்ணீர் தொட்டியில் சடலமாக வைக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் போலீசார் கொலையா? தற்கொலையா? என்பது தொடர்பாக விசாரணையை தீவிர்படுத்தி உள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.