ரத்தக்கறையோடு ஆற்றில் மிதந்து வந்த சடலங்கள்.. ஒரு பக்கம் தாய்.. மறுபக்கம் மகன் : பகீர் கிளப்பிய சம்பவம்!
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த தொட்டம்பட்டி கிராமத்தின் அருகே தூக்கிட்ட நிலையில் சுமார் 46 வயது மதிக்க தக்க அடையாளம் தெரியாத பெண்ணும், சுமார் 22 வயது மதிக்க தக்க ஆணும், ஆற்று நீரில் சட்டலமா இருப்பதாக மொரப்பூர் காவல் நிலையத்திற்கு தொட்டம்பட்டி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் மொரப்பூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் இருவரும் தாய், மகன் என்று காவல்துறையினரால் சொல்லப்படுகிறது. மேலும், இவர்கள் இருவரும் மாற்று திறனாளிகள் என்பதும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
தூக்கில் தொங்கிய படி தாயும், தலை மற்றும் முகத்தில் ரத்த வெள்ளத்துடன் மகனுக்கும் மர்மமான முறையில் இறந்து கிட்டந்துள்ளனர். இவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் தெரியவில்லை.
இறந்தவர்களின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து தாய் மற்றும் மகனை கொலை செய்து ஆற்றில் வீசி சென்றார்களா, அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருவரின் இறப்பு இப்பகுதி மக்களிடயே பெரும் பயத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
This website uses cookies.