தருமபுரி அடுத்த அதியமான் கோட்டை அருகே புதிதாக அமையுள்ள சிப்காட் பகுதியான வெத்தலகாரன் பள்ளம் செங்காளம்மன் கோவில்
அருகே இன்று அடையாளம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமும், 50 வயது மதிப்பு தக்க பெண் ஆகிய 2 பேரின் உடல்கள் காயங்களுடன் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தன.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து. உடனே அதியமான் கோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு பிணமாக கிடந்தவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என்ற விவரம் ஏதும் உடனே காவல்துறையினருக்கு தெரியவில்லை.
மேலும், 2 பேரையும் மர்ம நபர்கள் கொலை செய்து விட்டு 2 நாட்கள் கழித்து பிணங்களை இங்கே கொண்டு வந்து போட்டு உள்ளனர்.
இதனால் 2 பேரின் உடல்களும் அழுகிய நிலையில் உள்ளது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்தநிலையில் இறந்து போன 2 பேரின் உடல்களையும் காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தடவியல் நிபுணர்களை வரவழைக்கப்பட்டு பிரேதத்தை சோதனை செய்தனர்.
மேலும் படிக்க: நிர்வாண போட்டோ எடுத்து ₹2 கோடி கேட்டு மிரட்டி நடிகையுடன் உல்லாசம்… கைதாகும் பிரபல யூடியூபர்?
தருமபுரி மாவட்டத்தில் மாயமானவர்களின் பட்டியலை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த 2பேரையும் அடித்து கொன்றுவிட்டு உடல்களை இந்த பகுதியில் வீசி சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்குள் பல்வேறு கொலை கொள்ளை திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
This website uses cookies.