தமிழகம்

காட்டுப் பகுதியில் கிடந்த ஆண், பெண் சடலம்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

தருமபுரி அடுத்த அதியமான் கோட்டை அருகே புதிதாக அமையுள்ள சிப்காட் பகுதியான வெத்தலகாரன் பள்ளம் செங்காளம்மன் கோவில்
அருகே இன்று அடையாளம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமும், 50 வயது மதிப்பு தக்க பெண் ஆகிய 2 பேரின் உடல்கள் காயங்களுடன் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தன.

இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து. உடனே அதியமான் கோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு பிணமாக கிடந்தவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என்ற விவரம் ஏதும் உடனே காவல்துறையினருக்கு தெரியவில்லை.

மேலும், 2 பேரையும் மர்ம நபர்கள் கொலை செய்து விட்டு 2 நாட்கள் கழித்து பிணங்களை இங்கே கொண்டு வந்து போட்டு உள்ளனர்.

இதனால் 2 பேரின் உடல்களும் அழுகிய நிலையில் உள்ளது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்தநிலையில் இறந்து போன 2 பேரின் உடல்களையும் காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தடவியல் நிபுணர்களை வரவழைக்கப்பட்டு பிரேதத்தை சோதனை செய்தனர்.

மேலும் படிக்க: நிர்வாண போட்டோ எடுத்து ₹2 கோடி கேட்டு மிரட்டி நடிகையுடன் உல்லாசம்… கைதாகும் பிரபல யூடியூபர்?

தருமபுரி மாவட்டத்தில் மாயமானவர்களின் பட்டியலை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த 2பேரையும் அடித்து கொன்றுவிட்டு உடல்களை இந்த பகுதியில் வீசி சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்குள் பல்வேறு கொலை கொள்ளை திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

3 hours ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

4 hours ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

4 hours ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

4 hours ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

5 hours ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

5 hours ago

This website uses cookies.