தமிழகம்

காட்டுப் பகுதியில் கிடந்த ஆண், பெண் சடலம்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

தருமபுரி அடுத்த அதியமான் கோட்டை அருகே புதிதாக அமையுள்ள சிப்காட் பகுதியான வெத்தலகாரன் பள்ளம் செங்காளம்மன் கோவில்
அருகே இன்று அடையாளம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமும், 50 வயது மதிப்பு தக்க பெண் ஆகிய 2 பேரின் உடல்கள் காயங்களுடன் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தன.

இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து. உடனே அதியமான் கோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு பிணமாக கிடந்தவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என்ற விவரம் ஏதும் உடனே காவல்துறையினருக்கு தெரியவில்லை.

மேலும், 2 பேரையும் மர்ம நபர்கள் கொலை செய்து விட்டு 2 நாட்கள் கழித்து பிணங்களை இங்கே கொண்டு வந்து போட்டு உள்ளனர்.

இதனால் 2 பேரின் உடல்களும் அழுகிய நிலையில் உள்ளது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்தநிலையில் இறந்து போன 2 பேரின் உடல்களையும் காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தடவியல் நிபுணர்களை வரவழைக்கப்பட்டு பிரேதத்தை சோதனை செய்தனர்.

மேலும் படிக்க: நிர்வாண போட்டோ எடுத்து ₹2 கோடி கேட்டு மிரட்டி நடிகையுடன் உல்லாசம்… கைதாகும் பிரபல யூடியூபர்?

தருமபுரி மாவட்டத்தில் மாயமானவர்களின் பட்டியலை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த 2பேரையும் அடித்து கொன்றுவிட்டு உடல்களை இந்த பகுதியில் வீசி சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்குள் பல்வேறு கொலை கொள்ளை திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.