Categories: தமிழகம்

காவு வாங்கும் மேட்டுப்பாளையம் பவானி ஆறு… உயிரிழப்புகளை தடுக்க காவல்துறையின் புதிய திட்டம்!!

மேட்டுப்பாளையம் அருகே இரு வேறு இடங்களில் பவானி ஆற்றில் குளிக்க சென்ற 3 பெண்கள் உட்பட ஐந்து பேர் மாயமான நிலையில் 5 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது.

இதில் கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் ஜீவானந்தம்(வயது16). இவரது நண்பர் உப்பிலிபாளையத்தை சேர்ந்த கவுதம்(16) ஆகியோர் உடல் 3 நாட்களுக்கு பின் இன்று காலை மீட்கப்பட்டது.

தொடர்ந்து மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் மூழ்கி பலர் உயிரிழந்து வருகின்றனர். பலர் ஆற்றில் சுழல் இருப்பது தெரியாமல் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி பரிதாபமாக தங்களது உயிரை இழந்து வருகின்றனர்.

மேலும் ஆற்றில் ஆழத்தன்மை குறித்து தெரியாமல் இங்கு வரும் சிலர் மது அருந்திவிட்டுற இளைஞர்கள் ஆற்றில் இறங்கி குளிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அப்போது,பில்லூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது தெரியாமல் வெள்ள நீரில் சிக்கி பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது.

இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மட்டும் பவானி ஆற்றில் குளிக்கச் சென்ற 11 பேரில் மூன்று பெண்கள்,இரு ஐடிஐ மாணவர்கள் உட்பட ஐந்து பேர் ஒரே நாளில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்

எனவே பவானி ஆற்றில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் லைஃப் கார்ட்ஸ் திட்டம் தொடங்கபட்டுள்ளது.

கோவை மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் இந்த லைப் கார்ட்ஸ் புதிய திட்டத்தை துவக்கி வைத்தார்.

இந்த திட்டத்திற்காக மேட்டுப்பாளையம் காவல்துறையில் ஒரு எஸ்ஐ மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி பெற்ற 10 காவலர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது 24 மணி நேரமும் பவானி ஆற்றங்கரையோரம் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படும்.

மேலும், இந்த குழுவினர் பவானி ஆறு குறித்தும் வெள்ளப்பெருக்கு குறித்தும், வெள்ள நீரில் சிக்கி உயிரிழந்து வரும் மக்கள் குறித்தும், பவானி ஆற்றங்கரையில் உள்ள தேக்கம்பட்டி, நெல்லித்துறை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, வச்சிம்பாளையம், லிங்காபுரம், பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த உள்ளனர்.

இது குறித்து அந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே கலந்தாய்வு கூட்டமானது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் டிஎஸ்பி பாலாஜி,மற்றும் பவானி ஆற்றங்கரையோரம் உள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டு இந்த திட்டத்தில் ஏற்படுத்த வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனைகளையும், தங்களது கருத்துக்களையும் தெரிவித்தனர்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில் லைப் கார்டு குழுவில் உள்ள 11 பேரும்,24 மணி நேரமும் லைப் ஜாக்கெட்,கயிறுகள்,ஹெட் லைட்,டார்ச் லைட் உள்ளிட்ட பல்வேறு உயிர் காக்கும் கருவிகளுடன் தயார் நிலையில் இருப்பர்.

பவானியாற்றில் ஏற்படும் அசம்பாவிதங்கள் குறித்து இந்த குழுவிற்கு பொதுமக்கள் 24 மணி நேரமும் அழைக்கலாம் எனவும், அவசர உதவி எண்கள் மேட்டுப்பாளையம் டி எஸ் பி 866 73 73 105 , மேட்டுப்பாளையம் காவல் நிலையம் 94 981 0 1186 .

இந்த எண்களை பவானி ஆற்றில் ஏற்படும் அசம்பாவிதங்கள் குறித்து அவசர உதவி என்றால் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை தலைப்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சரி, நாங்கள் வைத்தால் தவறா? கொதித்தெழுந்த எடப்பாடி பழனிசாமி!

வருகிற 2026 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தேர்தல்…

5 hours ago

சமூக நீதி விடுதி; பெயரை மட்டும் மாற்றினால் சரியாகிவிடுமா? எல்.முருகன் சரமாரி கேள்வி!

இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறையின் கீழ் செயல்படும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும்…

6 hours ago

முருகன் கோவிலுக்குள் செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுப்பு! ஆனால் தமிழிசைக்கு அனுமதி? வெடித்த சர்ச்சை…

காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற முருகன் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு நடைபெற்றது. இந்த நிலையில்…

7 hours ago

சொமேட்டோ, ஸ்விக்கிக்கு டாட்டா காட்டிய ஹோட்டல் உரிமையாளர்கள்?  உதயமான புதிய உணவு  டெலிவரி ஆப்!

சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் இந்திய உணவு டெலிவரி பணிகளில் கோலோச்சி வரும் நிலையில் நாமக்கல் பகுதியைச்…

8 hours ago

நில மோசடி புகாரில் சிக்கிய மகேஷ் பாபு? நுகர்வோர் ஆணையத்தில் இருந்து பறந்த நோட்டீஸ்!

பண மோசடி வழக்கு  கடந்த ஏப்ரல் மாதம் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் பண மோசடியில் ஈடுபட்டதாக…

9 hours ago

இறந்தது தெரியாமல் 5 நாட்கள் கணவருடன் வசித்த மனைவி… மனதை பதற வைத்த சம்பவம்!

கோவை, தெற்கு உக்கடம் அருகே உள்ள கோட்டை புதூர் காந்தி நகரை சேர்ந்தவர் அப்துல் ஷா (வயது 48 ).…

10 hours ago

This website uses cookies.