விழுப்புரம் மாவட்டம் சின்னகோட்டகுப்பம் ஈ.சி.ஆர் சாலையில் பைக்கில் வந்த தனியார் மருத்துவமனை காவலாளி மாட்டின் மீது மோதி உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே சின்ன கோட்டக்குப்பம் சமரசம் நகர் சுனாமி குடியிருப்பை வசித்து வந்தவர் முஹம்மது சுலைமான் (44), தனியார் மருத்துவமனை காவலாளியாக வேலை பார்த்து வந்த இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் முஹம்மது சுலைமான் நேற்று இரவு வீட்டிலிருந்து பைக்கில்
மருத்துவமனைக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சின்ன கோட்டக்குப்பம் புதுச்சேரி- சென்னை ஈ.சி.ஆர் சாலையில் சென்றபோது சாலையில் குறுக்கே வந்த மாடு மீது சுலைமான் வாகனம் மோதியது.
இதில் சுலைமான் தூக்கி வீசப்பட்டு சாலை ஓரத்தில் இருந்த வாய்க்காலில் விழுந்தார். அவரை வீட்டு பக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
இதுகுறித்து, கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.