விழுப்புரம் மாவட்டம் சின்னகோட்டகுப்பம் ஈ.சி.ஆர் சாலையில் பைக்கில் வந்த தனியார் மருத்துவமனை காவலாளி மாட்டின் மீது மோதி உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே சின்ன கோட்டக்குப்பம் சமரசம் நகர் சுனாமி குடியிருப்பை வசித்து வந்தவர் முஹம்மது சுலைமான் (44), தனியார் மருத்துவமனை காவலாளியாக வேலை பார்த்து வந்த இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் முஹம்மது சுலைமான் நேற்று இரவு வீட்டிலிருந்து பைக்கில்
மருத்துவமனைக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சின்ன கோட்டக்குப்பம் புதுச்சேரி- சென்னை ஈ.சி.ஆர் சாலையில் சென்றபோது சாலையில் குறுக்கே வந்த மாடு மீது சுலைமான் வாகனம் மோதியது.
இதில் சுலைமான் தூக்கி வீசப்பட்டு சாலை ஓரத்தில் இருந்த வாய்க்காலில் விழுந்தார். அவரை வீட்டு பக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
இதுகுறித்து, கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.