Categories: தமிழகம்

ஓபிஎஸ் மகனுக்கு 9 நாள் கெடு… பூதாகரமாகும் சிறுத்தை உயிரிழந்த விவகாரம் : தேனி எம்பி ரவீந்திரநாத்துக்கு வனத்துறை நோட்டீஸ்!!

சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் தேனி எம்.பி.ரவீந்திரநாத் நேரில் ஆஜராகுமாறு வனத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேனி மாவட்டம் கைலாசப்பட்டி அருகே உள்ள கோம்பை என்னும் பகுதியில் உள்ள தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்தின் தோட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த சோலார் மின்வேலியில் சிக்கி சிறுத்தை மர்மமான உயிரிழந்ததாக,புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் ரவீந்திரநாத்தின் தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்திருந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

அதன் பின்னர் மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்திடம் தோட்ட மேலாளர்களாக பணிபுரியும் தங்கவேல், மற்றும் ராஜவேல் ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட விவசாயி அலெக்ஸ் பாண்டியனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் தோட்ட உரிமையாளரான தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் மீது வழக்கு பதிவு செய்து, அவரைக் கைது செய்ய வேண்டும் என்று 1000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பாக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் தலைமையிலான திமுகவினர் சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட வன அலுவலரிடம் புகார் அளித்தனர்.

அந்த நிலத்தின் உரிமையாளர்களாக மூன்று பேர் உள்ளனர். அதில் தேனி மக்களவை உறுப்பினராக ரவீந்திரநாத் உள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால்,நாடாளுமன்ற மக்களவை சபாநாயகரின் அனுமதி பெற வேண்டும், அதற்காக சபாநாயகரிடம் அனுமதி கேட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலர் சமர்த்தா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அவருக்கு வனத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் சமர்த்தாவிடம் கேட்டபோது, மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்திற்கு சம்மன் அனுப்பியுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மை இல்லை. நிலத்தின் உரிமையாளர் என்ற முறையில் அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும்.

அதற்காக அவர் வரும் அக்டோபர் 24 முதல் நவம்பர் 1 வரை உள்ள காலகட்டத்தில் ஏதாவது ஒரு நாள், அவர் நேரில் ஆஜராகி அவரது கருத்தை தெரிவிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சம்மன் என்பது சரியல்ல என்று தெரிவித்தார்.

சிறுத்தை உயிரிழந்த உபகாரத்தில் தேனி மக்களவை உறுப்பினருக்கு வனத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மூணு மணி நேரம் சாவடிச்சிட்டாங்க?- குபேரா பார்த்துவிட்டு தலையில் அடித்துக்கொண்ட ரசிகர்கள்?

வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…

13 minutes ago

தனது புது பெயரை அறிவித்த ஆர் ஜே பாலாஜி? சூர்யா 45 டைட்டில் போஸ்டரால் உருவான ஆச்சரியம்!

சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…

59 minutes ago

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

17 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

18 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

19 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

19 hours ago

This website uses cookies.